நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேவகோட்டை கிளை, ஆனந்தா கல்லுாரி இணைந்து கல்லுாரியில் அரசியல் சாசன விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர். கிளை தலைவர் போஸ் தலைமை வகித்தார். முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிளை பொருளாளர் பானுலதா, செயலாளர் ஜீவானந்தம் உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் அன்பரசன், பிரின்ஸ் கஜேந்திரபாபு அரசியலமைப்பு சட்டம் எனும் வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினார். கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.

