sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு மருத்துவமனையில்  சர்வர் பிரச்னை

/

அரசு மருத்துவமனையில்  சர்வர் பிரச்னை

அரசு மருத்துவமனையில்  சர்வர் பிரச்னை

அரசு மருத்துவமனையில்  சர்வர் பிரச்னை


ADDED : பிப் 20, 2025 01:46 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,:தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சர்வர் பிரச்னையால் நோயாளிகள் ஓபி சீட்டு பதிவதிலும், டாக்டர்கள் நோயாளிகளுக்கு உரிய மருந்து மாத்திரைகளை கணினியில் பதிவு செய்வதிலும் சிரமம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஓபி சீட்டு அவசியம். ஓபி சீட்டு பதிவெண் அடிப்படையில் நோயாளியின் நோய் குறித்த முழு விவரமும் சர்வரில் இருக்கும். அதன்படிதான் சிகிச்சை, மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. நேற்றும் நேற்று முன்தினமும் அரசு மருத்துவமனைகளில் உள்ள சர்வர் பிரச்னை ஏற்பட்டது.

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று காலை 8:00 மணியில் இருந்து 9:45 வரைக்கும் சர்வர் இயங்கவில்லை. 510 புற நோயாளிகள் நீண்ட நேரமாக காத்திருந்து ஓபி சீட்டு பதிய முடியாமல் டாக்டரை பார்த்து சென்றனர். மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது தமிழகம் முழுவதும் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும், சர்வர்களை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.






      Dinamalar
      Follow us