நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக அனைத்து ரோட்டையும் தோண்டி குழாய் பதித்து வருகின்றனர்.
இப்பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில் தோண்டப்பட்ட ரோடு முழுமையாக போடப்படாததால் கழிவு நீர் வாய்க்கால் சேதமடைந்து பல்வேறு தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் தோண்டப்பட்ட ரோடு, கழிவு நீர் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.