sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீணாகி வரும் சில்வர் குப்பை தொட்டி

/

வீணாகி வரும் சில்வர் குப்பை தொட்டி

வீணாகி வரும் சில்வர் குப்பை தொட்டி

வீணாகி வரும் சில்வர் குப்பை தொட்டி


ADDED : டிச 24, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 24, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் தெருக்களில் வைப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட சில்வர் குப்பை தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் துருப்பிடித்து வருகின்றன.

திருப்புவனம் தெருக்களில் குப்பைகளை சேகரிக்க முடியாமல் துாய்மை பணியாளர்கள் திணறுகின்றனர். அனைத்து குப்பைகளையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கொட்டுவதால் சுகாதார கேடு நிலவி வருகிறது. மேலும் குப்பை தரம் பிரிக்கப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுகிறது.

இதனை தவிர்க்கவும் திருப்புவனம் பேரூராட்சி வீதிகளில் குப்பைகளை எளிதாக சேகரிக்க வசதியாக சில்வர் குப்பை தொட்டிகள் பொருத்த திட்டமிடப்பட்டு ஒரு குப்பை தொட்டி 40 ஆயிரம் ரூபாய் வீதம் 20 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டன.

சில்வர் குப்பை தொட்டிகளில் சேகரமாகும் குப்பையை எளிதாக புதிய பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கொட்டுவதற்கு வசதியாக தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகள், ஓட்டல்கள், டீகடைகள் ஆகியவற்றின் வசதிக்காக இந்த ஸ்டாண்ட் வசதி உள்ள சில்வர் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சில்வர் குப்பை தொட்டிகள் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை பொருத்தாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகி துருப்பிடித்து வருகின்றன.






      Dinamalar
      Follow us