நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் ஒயிலாட்டப் பயிற்சி தொடக்க விழா நடந்தது. முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். விலங்கியல் துறைத் தலைவர் அழகுச்சாமி, வரலாற்றுத்துறைத் தலைவர் கலைச்செல்வி பேசினர். பயிற்றுநர் குமரன் மாணவர்களுக்கு ஒயிலாட்டத்தின் சிறப்பு, ஆடும்முறை பற்றியும் பயிற்சி அளித்தார். மாணவி அழகி மீனாள் நன்றி கூறினார்.

