sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

/

போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : ஜூலை 19, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:போலி சிம் கார்டு வாங்கிய வழக்கில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷுக்கு 64, ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.

கேரள மாநிலம் பெரிங்கோட்டுகரா கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவராக இருந்தார்.

2015ல் கோயம்புத்துார் மாவட்டம் கருமத்தம்பட்டியில் கியூ பிரிவு போலீசார் இவரையும், இவரது மனைவி சியானா உட்பட 5 பேரை கைது செய்தனர். திருச்சூர் வையூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கியூ பிரிவு போலீசார் விசாரணையில் ரூபேஷுக்கு 2015க்கு முன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இடையன்வலசையை சேர்ந்த நேருவிடம் அவரது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக விசாரணைக்கு தேவைப்படும் எனக்கூறி அவரது ரேஷன் கார்டை வாங்கி கொண்டு கன்னியாகுமரி சென்று விட்டார். அங்கு நேரு பெயரில் உள்ள ரேஷன் கார்டை அடையாளமாக காண்பித்து சிம்கார்டு வாங்கி தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்திற்காக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். 2015 நவ.,17 சிவகங்கை கியூ பிரிவு போலீசார் போலி ஆவணங்களை காண்பித்து சிம்கார்டு வாங்கியதாக வழக்கு பதிந்து, ரூபேைஷ கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. திருச்சூர் சிறையில் இருந்த ரூபேைஷ கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போலி ஆவணம் மூலம் சிம்கார்டு வாங்கியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் ரூபேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அழகர்சாமி ஆஜரானார்.

ரூபேஷ் மீது கோயம்புத்துார், மதுரை, திருப்பூர் பல்வேறு மாவட்டங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us