sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பரமக்குடி கலவரம் காயமடைந்தோர் குறித்து சிவகங்கை நீதிபதி விசாரணை

/

பரமக்குடி கலவரம் காயமடைந்தோர் குறித்து சிவகங்கை நீதிபதி விசாரணை

பரமக்குடி கலவரம் காயமடைந்தோர் குறித்து சிவகங்கை நீதிபதி விசாரணை

பரமக்குடி கலவரம் காயமடைந்தோர் குறித்து சிவகங்கை நீதிபதி விசாரணை


ADDED : செப் 15, 2011 09:19 PM

Google News

ADDED : செப் 15, 2011 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : ''பரமக்குடி கலவரத்தில் காயமுற்று சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா,'' என, நீதிபதி சோலைமலை நேற்று ஆய்வு செய்தார்.

பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தின ஊர்வலத்திற்கு வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இளையான்குடியில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கலவரக்காரர்கள் கற்களை கொண்டு தாக்கியதில், போலீசார் உட்பட பலர் காயமுற்றனர். அவர்களில் சிலர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஐகோர்ட் உத்தரவுபடி, நேற்று சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சோலைமலை, கலெக்டர் ராஜாராமன், இணை இயக்குனர் (மருத்துவம்) ரஞ்சனி தேவி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில், காயமடைந்தவர்கள் விபரம், அவர்களுக்கு எந்தவகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற விபரத்தை சேகரித்து சென்றனர்.










      Dinamalar
      Follow us