sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்

/

டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்

டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்

டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்


ADDED : ஆக 05, 2011 10:37 PM

Google News

ADDED : ஆக 05, 2011 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி:இளையான்குடி தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இளையான்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 500 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு 11 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும், தற்போது இரண்டு குழந்தைகள் டாக்டர் , இரண்டு பொது மருத்துவம், ஒரு அறுவை சிகிச்சை, சித்தா என 6 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மயக்க மருந்து டாக்டர் வாரத்தில் புதன் , வியாழன் என இரண்டு நாள் மட்டுமே வெளியே இருந்து வருகிறார். அறுவை சிகிச்சை டாக்டர்இருந்தும் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எலும்பு முறிவு, கண், பல், இதயம் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் இல்லாததாலும், மேலும் பணியில் இருக்கும் டாக்டர்களும் அடிக்கடி விடுப்பில் சென்று விடுவதாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.இப்பகுதி மக்களின் நலன் கருதி காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us