sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு

/

இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு

இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு

இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு


ADDED : செப் 16, 2011 11:09 PM

Google News

ADDED : செப் 16, 2011 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடியில் இலவச மாடு வழங்கும் விழாவில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மருதங்கநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பஞ்சவள்ளி முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அறிவழகன், துணை இயக்குனர் முத்தையா, மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் பேசினர். மாடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் , வசதியானவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி கிராம மக்கள் கூட்டமாக வந்து புகார் தெரிவித்தனர். போலீசார் பேசி அமைதிப்படுத்தினார். கலெக்டர் ராஜாராமன் பேசுகையில், ''கிராம சபையில் வைத்து தான் அரசு விதிகளின் படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உங்கள் புகாரையும் விசாரிக்கிறேன் . தவறு நடந்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கூறினார். தேர்வு செய்யப்பட்ட 43 பயனாளிகளில் இரண்டு பயனாளிகளுக்கு மாடுகளை வழங்கிவிட்டு உடனே கிளம்பினார். கிராம மக்கள் கூட்டமாக புகார் தெரிவித்ததையடுத்து விழா துவங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது.








      Dinamalar
      Follow us