
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி பொறுப்பாளர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். கல்விக்குழுமத்தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். ஆசிரியை செந்தாமரைச்செல்வி விருந்தினரை அறிமுகம் செய்தார்.
கபடி வீரர் அஜித் குமார் ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தாளாளர் ஜெய்சன் கே ஜெயபாரதன்வாழ்த்துரையாற்றினார்.முதல்வர் அர்ஷியா பாத்திமா நன்றி கூறினார்.

