sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்

/

மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்

மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்

மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்


ADDED : ஏப் 15, 2025 05:50 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையின் அடையாளமாக கருதப்படும் மண்பாண்ட தொழிலுக்கு இடையூறு செய்யும் விதமாக தொழிற் கூடங்களுக்கு முன்பாக மழை, கழிவுநீர் தேங்குவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் தரமாகவும்,கலை நயத்தோடும் இருப்பதினால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மண் கூஜாக்கள் மூலம் தண்ணீர் இயற்கையாக குளிரூட்டப்படுவதினால் அனைத்து தரப்பு மக்களும் கோடை காலத்தில் கூஜாக்களை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகை, கார்த்திகை விழாக்களிலும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற இத்தொழில் நிறுவனங்களுக்கு முன்பாக மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதும், கழிவு நீரும் சேர்ந்து தேங்குவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us