/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி
/
நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி
ADDED : டிச 21, 2025 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தனியார் நர்சரி பள்ளியில், யு.கே.ஜி., படிக்கும் 6 வயது சிறுமி மயங்கி விழுந்து இறந்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சேதுபதி நகரை சேர்ந்த இளங்கோ -- பவானி தம்பதியின் மகள் தேஜாஸ்ரீ, 6; தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்தார். நேற்று பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறுமி, ஏஞ்சல் உடை அலங்காரத்துடன் பள்ளிக்கு சென்றார்.
அப்போது, காலை, 9:00 மணிக்கு வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்ட தாக தெரிவித்தனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

