நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: புதுவயல் இ.எம் தெருவை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. காரைக்குடி அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், தேர்வில் தேர்ச்சி அடைவது குறித்து சிறுமி அச்சமடைந்ததோடு பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். பெற்றோர் பயப்படாமல் படிக்க கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை நீண்ட நேரமாகியம் அறை கதவை திறக்காமல் இருந்ததால், பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது சிறுமி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

