நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சினேகா 20. இவர் அரசு மருத்துவக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு லேப்டெக்னீசியன் படித்து வந்தார்.
பிப்.23 அன்று தேர்வு ஆரம்பித்ததால் தேர்வு சரியாக எழுதவில்லை என வீட்டில் புலம்பியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அடுத்த தேர்வில் பார்த்து கொள்ளலாம் என சமாதானம் செய்துள்ளனர்.
அதை ஏற்க மறுத்த அவர் பிப்.28 ல் எலிபேஸ்ட் சாப்பிட்டு தனக்கு மயக்கம் வருவதாக வீட்டில் கூறியுள்ளார். சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சையில் சேர்த்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சினேகா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

