/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்குறளை காட்சிப்படுத்திய மாணவர்கள்
/
திருக்குறளை காட்சிப்படுத்திய மாணவர்கள்
ADDED : பிப் 06, 2024 11:58 PM
சிவகங்கை : சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளியில் 1330 குறட்பாக்களுக்கும் களிமண் மற்றும் காகித உருவ மாதிரிகளை செய்து காட்சிபடுத்தி ஒரே நேரத்தில் மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கவுரை நிகழ்த்தினர்.
இப் பள்ளியில் 3 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் 262 மாணவர்கள் ஒன்றிணைந்து 1330 குறட்பாக்களுக்கும் விளக்கங்களை காட்சிப்படுத்தும் விதமாக களிமண் மற்றும் காகித பொம்மைகளை செய்தனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் மதிப்பீட்டாளர் குழுவினர் மாணவர்களின் கண்காட்சியை மதிப்பீடு செய்தனர்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தலைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா, விழித்தெழு அறக்கட்டளை நிறுவனர் தினேஷ்குமார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளை பொதுச்செயலாளர் தங்க ஆதிலிங்கம், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் மாணவர்களை மதிப்பீடு செய்தனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவன அங்கீகாரச் சான்றிதழை சிவகங்கை முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன் பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயனிடம் வழங்கினார்.

