UPDATED : ஜூன் 03, 2026 03:40 PM
ADDED : ஜூன் 03, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற லோகநாதன் கூறியதாவது:
மானாமதுரை சப்டிவிஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இல்லாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாகவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக கஞ்சா,மது மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
