ADDED : நவ 22, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கையில் கலைப்பண்பாட்டு துறை சார்பில் தமிழிசை விழா நடந்தது.
அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ரேவதி விழாவை துவக்கி வைத்து, சான்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழிசை மூவர் பாடலுக்கு குரலிசை அக் ஷயாஹரி, வயலின் ரவீந்திரன், கடம் முத்துக்குமரன் பாடினர். இசை நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் நாதஸ்வர கலாநிதி வேல்முருகன் நிகழ்த்தினார்.
அரசு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். பரத நாட்டிய ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

