ADDED : ஜூலை 10, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் சர்வ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. வேட்டையன்பட்டி என்பீல்டு காலனியில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஜூலை 8ல் யாகசாலை பூஜை தொடங்கி நான்கு கால பூஜையாக நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜை நடத்தப்பட்டது.
நேற்று காலை 10:30 மணிக்கு கோபுரங்களுக்கும், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

