sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசனுாரில் 775 ஏக்கரில் ‛சிப்காட் தொழிற்சாலை;   விரைந்து துவக்க முதல்வரின் கவனம் அவசியம் 

/

அரசனுாரில் 775 ஏக்கரில் ‛சிப்காட் தொழிற்சாலை;   விரைந்து துவக்க முதல்வரின் கவனம் அவசியம் 

அரசனுாரில் 775 ஏக்கரில் ‛சிப்காட் தொழிற்சாலை;   விரைந்து துவக்க முதல்வரின் கவனம் அவசியம் 

அரசனுாரில் 775 ஏக்கரில் ‛சிப்காட் தொழிற்சாலை;   விரைந்து துவக்க முதல்வரின் கவனம் அவசியம் 


ADDED : ஜன 22, 2025 09:08 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே அரசனுாரில் 775 ஏக்கரில் சிப்காட் தொழில் வளாகம் துவக்குவதற்கு முன் சுற்றுச்சூழல் ஆணைய ஒப்புதலுக்காக ஆவணங்கள் காத்திருக்கிறது. இங்கு விரைந்து சிப்காட் தொழிற்பேட்டை துவக்கி ஆட்டோமொபைல், ஜவுளி தொழிற்சாலை மூலம் 36 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி என்ற வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.

சிவகங்கை மாவட்டம், அரசனுார், இலுப்பக்குடி, கிளாதரி கிராமங்களில் 1,451 ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்டது. இத்திட்டத்தை அரசு கிடப்பில் போட்டு வந்தது.

இந்த ஆட்சியில் 2021 சட்டசபை கூட்டத்தில் சிவகங்கை அருகே அரசனுாரில் விரைவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இங்கு சென்னை, கோயம்புத்துார் ஆகிய நகரங்களுக்கு இணையாக தொழிற்பேட்டை அமைக்கப்படும். அப்படி அமையும் பட்சத்தில் நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே 1,451 ஏக்கர் நிலம் எடுக்க திட்டமிட்ட நிலையில், தற்போது இலுப்பைக்குடி 605.39, கிளாதிரி 62, அரசனுார் 108.40 என ஒட்டு மொத்தமாக 775.79 ஏக்கர் மட்டுமே கையகம் செய்துள்ளனர். இங்கும் தொழிற்பேட்டை துவக்குவதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ரூ.342 கோடி


இந்த இழுபறிக்கு பின் அரசனுாரில் தொழிற்பேட்டை அமைக்க முதற்கட்ட நிதியாக ரூ.342 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அடுத்தகட்டமாக தொழிற்பேட்டை அமைக்க தடையின்மை சான்று பெற, மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளனர். எனவே சுற்றுச்சூழல் ஆணைய அனுமதியை விரைந்து பெற்றுத்தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

36,000 பேரின் கனவு நினைவாகுமா

அதனை தொடர்ந்து தடையின்றி சிப்காட் தொழிற்பேட்டையில் உரிய தொழில்முனைவோர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இங்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகம் தயாரிப்பு மற்றும் ஜவுளி உற்பத்தி ஆலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் வர உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 36 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். சிவகங்கை மாவட்ட பட்டதாரிகளின் கனவை நினைவாக்கும் விதத்தில் முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை, சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து துவக்கும் விதத்தில் அமைய வேண்டும் என பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

அடிப்படை வசதிகளில் துரிதம் அவசியம்


அரசனுாரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய தனி கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமானம் நிலையம் அருகில் இருப்பதால் அங்கிருந்து தொழிற்சாலைக்கான மூலதனம் எடுத்து வர, பிற மாநிலங்கள், நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை எடுத்து செல்ல, மதுரை - அரசனுாருக்கு அகலமான மற்றும் தரமான ரோடு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிற்சாலைகள் இயங்க தேவையான தண்ணீர், குடிநீர் வசதிகளை செய்துதர அரசு முனைப்பு காட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us