sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை நீர்நிலைகளில் தண்ணீர் மீன்பிடி வலை விற்பனையும் ஜோர்

/

மானாமதுரை நீர்நிலைகளில் தண்ணீர் மீன்பிடி வலை விற்பனையும் ஜோர்

மானாமதுரை நீர்நிலைகளில் தண்ணீர் மீன்பிடி வலை விற்பனையும் ஜோர்

மானாமதுரை நீர்நிலைகளில் தண்ணீர் மீன்பிடி வலை விற்பனையும் ஜோர்


ADDED : நவ 07, 2024 01:28 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மீன்களை பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் வைகை ஆற்றில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் தேங்கி வருவதை தொடர்ந்து இதில் உள்ள மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு வலைகளை வைத்து பிடித்து வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த மீன் வலை விற்பனை செய்யும் வியாபாரி கணேசன் 48, கூறியதாவது: கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்ததை தொடர்ந்து வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடி வருகிற நிலையில் ஏராளமான மீன்களும் வருகின்றன.இவற்றை பிடிப்பதற்காக ஏராளமானோர் எங்களிடம் வலைகளை வாங்கி வருகின்றனர்.ஒரு வலை தரத்திற்கேற்ப ரூ.200 லிருந்து ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது என்றார்.






      Dinamalar
      Follow us