ADDED : மார் 26, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை;சிவகங்கை உடைகுளம் பகுதியில் கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையில் எஸ்.ஐ., சக்திவேல் உள்ளிட்ட போலீசார் உடைகுளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு டிப்பர் லாரியில் மண் ஏற்றி வந்தவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பினார். லாரியை கைப்பற்றிய போலீசார் அதன் உரிமையாளர் பூவாளி கிராமத்தை சேர்ந்த பிரபாகரனை 28 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
