/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஜன.11ல் டிட்டோ ஜாக் போராட்டம்
/
சிவகங்கையில் ஜன.11ல் டிட்டோ ஜாக் போராட்டம்
ADDED : ஜன 07, 2024 04:35 AM
சிவகங்கை: டிட்டோஜாக் கூட்டம் சிவகங்கையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு பிரபாகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துபாண்டியன், டேவிட் அற்புதம், அழகப்பன், பாண்டியராஜன், மாவட்ட நிதிக் காப்பாளர் சிங்கராயர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
அக்.12ம் தேதி சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் அமைப்பின் 12 கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த கோரிக்கையை ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. அமைச்சர் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜன.11ல் வட்டார தலைநகரங்களில் மாலை நேர கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதனை தொடர்ந்து ஜன.27 மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருக்க மாநில ஒருங்கிணைப்பு குழு முடிவுஎடுத்துள்ளது.
இதை அமல்படுத்தும் விதமாக ஜன.11ல் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.