ADDED : ஆக 10, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடை நடத்தி வரும் அப்துல் கனி மகன் சபூர் ஆலம் பாதுஷா. இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து கடையில் சோதனை செய்தனர்.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.