sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா

/

வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா

வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா

வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா


ADDED : ஜன 15, 2024 12:21 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர், திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டியில் வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில் வளாகத்தில் சுற்றுலா பொங்கல் விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் வரவேற்றார். விழாவில் அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த 27 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களை சுற்றுலாத்துறையினர் கவுரவித்தனர். உள்ளூர் மக்களுக்கு வெளிநாட்டினர் தமிழில் 'பொங்கலோ, பொங்கல்' என்று கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

பொங்கல் பால் பொங்கியபின் உருமி, கரகாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், மேளதாளம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கரகாட்டம் பார்த்த வெளிநாட்டினர் அவர்களும் தலையில் கரகம் வைத்து ஆட முயன்றனர்.

மாட்டு வண்டியில் வெளிநாட்டினர் கோயிலை வலம் வந்தனர். சிலம்பம், வாள் சுற்றி மாணவர்கள் சாகசம் செய்தனர். மாணவியின் பரதநாட்டிய நடனம் நடந்தது. உற்சாகத்துடன் கிராமத்தினர் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us