sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விழாக்காலங்களில் போக்குவரத்து மாற்றத்தால் அவஸ்தை! நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள்

/

விழாக்காலங்களில் போக்குவரத்து மாற்றத்தால் அவஸ்தை! நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள்

விழாக்காலங்களில் போக்குவரத்து மாற்றத்தால் அவஸ்தை! நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள்

விழாக்காலங்களில் போக்குவரத்து மாற்றத்தால் அவஸ்தை! நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள்


ADDED : அக் 08, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் முக்கிய போக்குவரத்து மையமாகும். குறிப்பாக மதுரை -தஞ்சாவூர் போக்குவரத்து திருப்புத்துார் வழியாகவே நடைபெறுகிறது. இந்த வழித்தடத்தில் தொடர்ச்சியாக பஸ்கள் இயங்குகின்றன. மேலும் திருச்சி -சிவகங்கை, தேவகோட்டை- மதுரை, காரைக்குடி -மதுரை, திண்டுக்கல் -காரைக்குடி ஆகிய வழித்தடங்களிலும் பஸ்கள் தொடர்ந்து இயங்குகின்றன. இதனால் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டிற்கு சுற்று வட்டாரக் கிராமத்தினர் மற்றும் வெளியூர் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திருப்புத்துாரில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், மருதுபாண்டியர் குருபூஜை போன்ற நிகழ்வுகளின் போது திருப்புத்துார் நகருக்குள் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அப்போது பஸ்சில் வரும் பயணிகள் நகரின் எல்லைப்பகுதிகளில் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி தொலைதுார நகர்களுக்கு செல்ல பஸ் மாற முடியவில்லை.

ஆட்டோ,கார் போன்ற வாகனங்களில் ஏறி மற்றொரு பகுதிக்கு வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் பயணத்தை தொடர முடியாமல் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். கூடுதலாக பணம், நேரம் செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

வக்கீல் ராஜ்மோகன் கூறுகையில், போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தும் போது பயணிகள் அலைவதைத் தவிர்க்க உள்ளாட்சி நிர்வாகங்கள்,போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த வேண்டும். முன்பு சீரணி அரங்கம் பகுதி அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. அது போல தம்பிபட்டி மைதானம், சிவகங்கை ரோட்டில் கண்மாய் பகுதி போன்ற இடங்களையும் ஆய்வு செய்யலாம். நேரடியாக புறவழிச்சாலைக்கு செல்ல இந்த இடங்களில் வசதி உள்ளது. இதனால் அனைத்து வழிகளிலிருந்தும் பஸ்கள் எளிதாக வந்து செல்ல முடியும்' என்றார்.

பஸ்கள் பல இடங்களில் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் போலீசார் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முக்கிய நிகழ்ச்சிகளுக்காக போக்குவரத்து மாற்றத்தின் போது அனைத்து வழித்தடங்களிலிருந்தும் வரும் பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வசதியான இடத்தை தேர்வு செய்து தற்காலிக பஸ்ஸ்டாண்ட் செயல் படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us