நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவத் துறை சார்பில் அவசர நிலைகளைக் கையாள பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் சத்யபாமா தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் தங்கதுரை, துணை முதல்வர் விசாலாட்சி, இணை பேராசிரியர் கார்த்தி, உதவி நிலைய மருத்துவர் முகமது ரபி, தென்றல் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்கள், காவல்துறை, அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர நிலை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது.