ADDED : ஜன 25, 2024 05:14 AM
காரைக்குடி: செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அரசு நிதி உதவியுடன் ஊட்டச்சத்து தானியங்கள், உலர் பழங்கள் தயாரிப்பு மதிப்பு கூட்டும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தொழில் முனைவோர்கள் சுய உதவி குழுவினர் பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
தயார் நிலை சிறுதானிய உணவு மற்றும் உலர் பழங்கள் தயாரிப்பு பற்றிய செயல்முறை பயிற்சி வழங்கப்படும். ஜன. 30, பிப்.1, 6, 8, 13 15, 20 மற்றும் 22 ஆகிய எட்டு நாட்கள் நடைபெறுகிறது. . செட்டிநாடு வேளாண் கல்லூரியில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. ஒரு நாள் பயிற்சிக்கு 40 நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முன்பதிவு அவசியம். விவரங்களுக்கு 94863 92006, 63818 19733 என்ற எண்ணையும் kamalasundari.s@tnau.c.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.