ADDED : அக் 11, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதுார் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.
கட்டையன்பட்டி தலைமை ஆசிரியர் பர்வதம், ஆசிரியர் பயிற்றுநர் அப்சரா பானு கருத்தாளர்களாக செயல்பட்டனர். கிராமப்புற மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த கற்றல் கற்பித்தல் பொருட்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாக பாடம் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.