சிவகங்கை : 'சிவகங்கை மாவட்ட தி.மு.க., தொழிலாளர் அணி அமைப்பாளர் தனசேகரன் 47. இவர் கான்ட்ரக்ட் தொழில் செய்து வருகிறார். தற்போது காளவாசல் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறார்.
இவரிடம் தாமோதரன் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு தாமோதரன் காளவாசல் பகுதியில் சாலை அமைக்க இடையூறாக இருந்த காரை எடுக்க அந்த பகுதியை சேர்ந்த மூவேந்திரனிடம் கூறியுள்ளார். மூவேந்திரன் தரப்பினர் அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மூவேந்திரன் தரப்பினர் தனசேகரன், தீனா 30, தாமோதரனை தாக்கியுள்ளனர்.
3 பேருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்தவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தாமோதரன் கொடுத்த புகாரில் நகர் போலீசார் மூவேந்திரன், முருகன், காளிமுத்து, பஞ்சு, செல்வி, மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து மூவேந்திரன், மணிகண்டனை கைது செய்தனர்.