ADDED : டிச 26, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் போலீசார் இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
காரைக்குடி சேர்வார் ஊரணியைச் சேர்ந்தவர்கள் குணா 22, மணிகண்டன்24. குணா மீது ஆயுத வழக்கு, காயப்படுத்துதல், கஞ்சா, கொலை முயற்சி வழக்கு உள்ளன.அது போல் மணிகண்டன் மீது கொலை, காயப்படுத்துதல்,கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு வழக்குகள் உள்ளன. இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரைத்தார்.
கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின்படி இருவரையும் திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

