
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் மில் கேட் அருகே வாளுடன் காரில் இருவர் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., வைரமணி தலைமையிலான போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் மானாமதுரை அருகே கள்ளர் வலசை சேது மகன் அஜித் 28, ஓச்சந்தட்டு குருசாமி மகன் குமரேசன் 35 என தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வாள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

