UPDATED : ஆக 16, 2026 05:08 PM
ADDED : ஆக 16, 2026 02:40 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி இன்ஜி., மாணவரான அறிவழகன் 19 கடந்த ஆக.13ல் கல்லூரி சாலையில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அறிவழகன் கையில் இருந்த அலைபேசியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து அறிவழகன் அழகப்பாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அலைபேசியை பறித்தது, கோவிலூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் விக்னேஸ்வரன் 18, மானகிரியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆதித்யன் 20 என தெரிய வந்தது. அலைபேசியை பறிமுதல் செய்ததோடு இருவரையும் கைது செய்தனர்.
