ADDED : ஜன 11, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மேலச்சேத்துார் கிராமத்தை சேர்ந்த விஜயராமு மகன் சோபன் ராஜ் 21; முடிக்கரை கிராமம் கண்ணப்பன் மகன் விஷால் 21. இருவரும் இளையான்குடியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தனர்.
நேற்றிரவு 7:00 மணிக்கு மறவமங்கலத்தில் இருந்து காளையார்கோவிலுக்கு இருவரும் ஒரே டூவீலரில் வேகமாக சென்றனர்.
காளையார்கோவில் கீழ வளையம்பட்டி அருகே சென்றபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். போலீசார் விசாரிக்கின்றனர்.