/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி
/
டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி
ADDED : ஏப் 27, 2025 02:58 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பரமக்குடி --- மதுரை நான்கு வழிச்சாலையில், டூ-வீலர் மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்தவர் ராம்பாண்டி, 50. மடப்புரத்தைச் சேர்ந்தவர் அய்யணன், 55; கட்டட தொழிலாளர்கள்.
இருவரும் வன்னிகோட்டை சென்று விட்டு, நேற்று காலை, 10:15 மணிக்கு, டூ-வீலரில் திருப்புவனம் வந்தனர்.
பரமக்குடி -- மதுரை நான்கு வழிச்சாலையில், தவளைக்குளம் விலக்கு அருகே வந்தபோது, இளையான்குடியில் இருந்து மதுரை சென்ற கார், டூ-வீலர் பின்பக்கம் மோதியதில், ஹெல்மெட் அணியாமல் டூ-வீலரில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீசார், இளையான்குடியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜான்முகமது, 65, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

