sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குண்டும் குழியுமாக உஞ்சனை ரோடு

/

குண்டும் குழியுமாக உஞ்சனை ரோடு

குண்டும் குழியுமாக உஞ்சனை ரோடு

குண்டும் குழியுமாக உஞ்சனை ரோடு


ADDED : நவ 04, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 04, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : அரியக்குடி அருகே உஞ்சனை முதல் தானாவயல் செல்லும் ரோடு குண்டும் குழியுமாகவும், குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சி, உஞ்சனை -- தானாவயல் செல்லும் ரோடு உள்ளது. அரியக்குடி, வேட்டைக்காரன் பட்டி, தானாவயல், ஆறாவயல், தேவகோட்டை ரஸ்தா செல்லும் ேராட்டில் தினமும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. ேராடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை புதிய ேராடு போடப்படவில்லை. அரியக்குடியிலிருந்து வேட்டைக்காரன்பட்டி வரை உள்ள 3 கி.மீ., தூரத்திற்கு ேராடு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இரவில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. முற்றிலும் சேதமான இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us