sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

2.40 லட்சம் கோழிகளுக்கு  பிப்.1 முதல் தடுப்பூசி முகாம் 

/

2.40 லட்சம் கோழிகளுக்கு  பிப்.1 முதல் தடுப்பூசி முகாம் 

2.40 லட்சம் கோழிகளுக்கு  பிப்.1 முதல் தடுப்பூசி முகாம் 

2.40 லட்சம் கோழிகளுக்கு  பிப்.1 முதல் தடுப்பூசி முகாம் 


ADDED : ஜன 30, 2025 09:46 PM

Google News

ADDED : ஜன 30, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கையில் 2.40 லட்சம் கோழிகளுக்கு பிப்., 1 முதல் 14 வரை தடுப்பூசி அளிக்கப்படும் என இணை (கால்நடை) இயக்குனர் ராமசந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஆண்டுதோறும் இருவார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் பிப்., 1 முதல் 14 வரை நடத்தப்படும். இந்த முறை கோழிக்கழிச்சலை தடுக்கும் விதமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில் இத்தடுப்பூசி செலுத்தப்படும். இந்நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும்.

குறிப்பாக 8 வாரத்திற்கு மேற்பட்ட கோழிகளுக்கு அதிக பாதிப்பை தரும். இந்நோயின் அறிகுறியாக கோழிக்கு உடல் நல பாதிப்பு, தீவனம், தண்ணீர் எடுக்காது. கோழி எச்சம் வெள்ளை, பச்சை நிறத்தில்அதிக துர்நாற்றத்துடன் இருக்கும். கோடைக்கு முன் இந்நோய் தாக்கும் என்பதால் பிப்., 1 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை கோழி வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ளவும், என்றார்.






      Dinamalar
      Follow us