ADDED : நவ 08, 2025 01:28 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: 'வந்தே மாதரம்' பாடல் தோன்றி 150 ஆண்டு கொண்டாட்ட விழா சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் நடந்தது.
மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார்.
முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரை ஆற்றினார்.
சட்டசபை அமைப்பாளர் சத்தியநாதன், இணை அமைப்பாளர் நாகேஸ்வரன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர்கள் சுகனேஸ்வரி, கந்தசாமி, நகர் தலைவர் உதயா, மாவட்ட இளைஞரணி தலைவர் கவுதம், காளையார்கோவில் போதி இண்டர்நேஷனல் பள்ளி தாளாளர் மணீஷ் உட்பட பா.ஜ., மாவட்ட, மண்டல், நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காளையார்கோவில் போதி இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மற்றும் பா.ஜ., வினர் தேசிய கொடியை ஏந்தி 'வந்தே மாதரம்' பாடலை பாடினர்.
