/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் விபீஷணன் சேவை
/
திருக்கோஷ்டியூரில் விபீஷணன் சேவை
ADDED : பிப் 10, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் தை அமாவாயை முன்னிட்டு நேற்று விபீஷணன் சேவை நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று ஏக உத்ஸவமாக விபீஷணனுக்கு பெருமாள் காட்சி அளித்தார். காலை 9:00 மணிக்கு, ஏக உத்ஸவமாக பெருமாள் அலங்காரத்தில் மண்டபம் எழுந்தருளினார்.
தொடர்ந்து கைத்தல சேவை நடந்தது. தொடர்ந்து தெற்கு நோக்கி எழுந்தருளி தீபாராதனை நடந்தது.
மாலை 5:30 மணிக்கு விபீஷ்ணருக்கு காட்சி அளித்து, பெருமாள் தென்னைமரத்து வீதி புறப்பாடு நடந்தது.