sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

/

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 26, 2024 05:25 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரண்மனைவாசலில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா முன்னிலை வகித்தனர். கலெக்டர் பி.ஏ., (பொது) ஜெயமணி, தாசில்தார்கள் சிவகங்கை சிவராமன், (தேர்தல் பிரிவு) மேசியாதாஸ் பங்கேற்றனர்.

சிவகங்கை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் பாதுகாப்பு அளித்தனர். கலெக்டர் துவக்கி வைத்த விழிப்புணர்வு ஊர்வலம் அரண்மனைவாசலில் இருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, சான்றினை கலெக்டர் வழங்கினார். ரங்கோலி கோலமிட்ட 3 மகளிர் குழுவினருக்கும் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us