/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை
/
ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை
ADDED : ஜன 03, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,526 ஓட்டுச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 2026 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரினை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்காக மாவட்ட அளவில் 4 சட்டசபை தொகுதியில் உள்ள 1,526 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வாக்காளர் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றார்.

