/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
/
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : பிப் 17, 2024 05:02 AM
சிவகங்கை: மலேசியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெள்ளி வென்ற சிவகங்கை மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இப்பள்ளி மாணவி நித்திகா மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்ப போர்க்கலை சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்றார். இவர் ஒற்றை, இரட்டை சிலம்ப பிரிவுகளில் வெள்ளி பதக்கம் பெற்றார்.
இப்பள்ளி மாணவர் ஆல்வின் சுதன் டில்லியில் நடந்த கிக்பாக்சிங் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெற்றி பதக்கம் பெற்றார். இவ்விரு மாணவர்களுக்கும் பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இடையமேலுாரில் நடந்த பாராட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஊராட்சி தலைவர் சிவதாஸ் தலைமை வகித்தார்.
பள்ளி தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.