/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு: : 25 கண்மாய்களில் 17 ஆயிரம் பறவைகள் வருகை
/
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு: : 25 கண்மாய்களில் 17 ஆயிரம் பறவைகள் வருகை
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு: : 25 கண்மாய்களில் 17 ஆயிரம் பறவைகள் வருகை
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு: : 25 கண்மாய்களில் 17 ஆயிரம் பறவைகள் வருகை
ADDED : ஜன 04, 2026 06:12 AM

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் வனத்துறையினர் ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்திய 25 கண்மாய்களில் 17 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரிய வந்தது.
வனத்துறையினர் ஆண்டுதோறும் ஈரநிலம் மற்றும் நிலப்பறவைகள் கணக்கெடுப்பை நடத்துகின்றனர்.
இந்த ஆண்டு டிச.28ல் முதற்கட்டமாக ஈரநிலப்பறவைகள் கணக்கெடுப்பை சரணாலய பறவைகள் அதிகமாக வலைசை போகும் கொள்ளுகுடிப்பட்டி கண்மாய், வேட்டங்குடி, மாதவரயான்பட்டி, சித்த கண்மாய், அய்யாபட்டி கண்மாய் உள்ளிட்ட மாவட்ட அளவில் 25 கண்மாய்களில் கணக்கெடுப்பு நடந்தது.
மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், உதவி வனப்பாதுகாவலர் மலர்கண்டன், வன அலுவலர் கார்த்திகேயன்,வனப்பணியாளர்கள் மற்றும் ஆ.பி.சீ.அ.கல்லூரி முன்னாள் துணை முதல்வர் கோபிநாத், பறவை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோருடன் திருப்புத்துார் ஆ.பி.சீ.அ. கல்லுாரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடுகளிலிருந்து பறவைகள் புறப்படும் காலை, மாலை நேரங்களில் தொலைநோக்கி, மெர்லின் செயலி மூலம் கணக்கெடுத்தனர்.
இரவுப் பறவைகள் நைட் ெஹரான், நைட் ேஹர், ஆந்தை போன்றவை கணக்கெடுப்பு நடந்தது. கணக்கெடுப்பில் கொக்கு, நாரை, வாத்து இனங்களைச் சேர்ந்த நத்தை கொத்தி நாரை, அரிவாள் மூக்கன், பாம்புதாரா, மஞ்சன் மூக்கன் நாரை, உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, கரண்டிவாயன் உள்ளிட்ட வழக்கமான பறவைகள் அதிகமாக காணப்பட்டன.
புதிய வரவாக சைனீஸ் பான்ட ஹெரான்', நார்த் ஸாலர், ஆர்க்டிக் ஆலா போன்ற பறவைகள் வந்துள்ளதும் தெரியவந்தது.
மொத்தத்தில் 89 வகையான 17 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் இருந்தது தெரிய வந்தது. நிலப்பறவைகள் கணக்கெடுப்பு ஜன. கடைசி வாரத்தில் நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

