sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேடன் நகர் மக்களுக்கு சுடுகாட்டு இடம் வழங்கலா

/

வேடன் நகர் மக்களுக்கு சுடுகாட்டு இடம் வழங்கலா

வேடன் நகர் மக்களுக்கு சுடுகாட்டு இடம் வழங்கலா

வேடன் நகர் மக்களுக்கு சுடுகாட்டு இடம் வழங்கலா


ADDED : நவ 26, 2024 05:10 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகே வேடன் நகர் பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சுடுகாடு இருந்த இடம் என புகார் எழுந்த நிலையில் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துஉள்ளனர்.

காரைக்குடி கழனிவாசல்அருகே உள்ள வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து, வேடன் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் 106 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

பட்டா வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான இடம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தாலுகா அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

திருவேலங்குடி பைபாஸ் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தை அளவிடும்பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். நேற்று சம்பந்தப்பட்ட இடம் பிரித்து வேடன் நகர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், வழங்கப்பட்ட இடம் சுடுகாட்டு பகுதியாக உள்ளது. நிலத்தை தோண்டும் போது எலும்புக் கூடுகள் வருகிறது. இதில், எப்படி வீடுகட்டி குடியிருக்க முடியும். மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தாசில்தார் ராஜா கூறுகையில், வேடன் நகர் பகுதி மக்களுக்கு, வழங்கப்பட்ட இடம் முறையாக அளந்து வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட இடம் சுடுகாடு இடம் இல்லை.






      Dinamalar
      Follow us