sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்

/

 வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்

 வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்

 வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்


ADDED : நவ 15, 2025 06:07 AM

Google News

ADDED : நவ 15, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி கிராமங்களில் பரவலாக ஒரு மாதத்திற்கு முன்னர் செய்த நடவு மற்றும் விதைப்பு பயிர்கள் தொடர்ந்து மழையின்றி வாடும் சூழலில் உள்ளது. கண்மாய்களிலும் போதிய நீர் இல்லாததால் வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

என்.புதூர், பனையம்பட்டியில் கண்மாய் கரையில் மோட்டார் வைத்து கண்மாயிலிருந்து நீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். மணிக்கு ரூ. 200லிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் சில நாட்கள் மட்டுமே தண்ணீரை பாய்ச்ச முடியும். தாமதமாக விதைத்தவர்கள் தண்ணீர் இன்றி உரம் போட முடியாமலும் தவிக்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், மழையில்லாமல் ஆவணி கடைசியில் தான் விதைப்பு செய்தோம். பிறகு ஒரு மழை தான் நன்றாக பெய்தது. பிறகு சரியான மழை இல்லை. தற்போது வயலில் உள்ள ஈரப்பதத்தில் பயிர்கள் தாக்குப்பிடிக்கின்றன. அடுத்த சில நாட்களில் மழை பெய்தால் நல்லது. பனி அதிகரித்தால் பயிர்கள் வளர்ச்சி பாதித்து சுருங்கத் துவங்கி விடும்' என்று கவலை தெரிவித்தனர்.

வேளாண்துறையினர் கூறுகையில், 'விவசாயிகள் பயிரைக்காப்பாற்ற நிலத்தடிநீர், இருக்கும் கண்மாய் நீரை பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மழை பெய்தால் தான் பயிர் செழிப்புடன் வளர்ந்து நல்ல மகசூலைத்தரும்.' என்றனர்.






      Dinamalar
      Follow us