/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் அருகே பெண் செயின் பறிப்பு
/
காளையார்கோவில் அருகே பெண் செயின் பறிப்பு
ADDED : நவ 29, 2024 02:45 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே சிறியூரைச் சேர்ந்த முருகன் மனைவி கன்னிகா 38. இவர் காளையார்கோவிலில் குடியிருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் சொந்த ஊரான சிறியூரில் விவசாய பணிக்காக சென்று விட்டு மாலை 4:15 மணிக்கு காளையார் கோவிலுக்கு திரும்பி சென்றார். புரசடை உடைப்பு திறந்த வெளிச்சிறை அருகே சென்றபோது பின்னால் வழி கேட்பது போல் டூவீலரில் வந்தவர்கள் கன்னிகாவை வழி மறித்தனர்.
திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர்.
கன்னிகா காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

