sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா

/

 அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா

 அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா

 அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா


ADDED : டிச 10, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அலுவலக உதவியாளர் பணிக்கு வேண்டுமென்றே தாமதமாக அழைப்பு கடிதம் அனுப்பி முறைகேடு நடப்பதாக கூறி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

எஸ்.புதுார் ஒன்றியம் திருமலைக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மணிமேகலை. இவர் சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். வேறு ஒருவருக்கு அப்பணியை வழங்கும் நோக்கத்துடன், வேண்டுமென்றே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை தனக்கு தாமதமாக அனுப்பியதாக கூறி நேற்று ஒன்றிய அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். முன்னதாக அதிகாரியிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

பி.டி.ஓ., காதர்முகைதீனிடம் கேட்டபோது, தபால் தாமதமாக சென்றதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இப்பணிக்கு 27 விண்ணப்பங்கள் வந்திருந்தது. அதில் தகுதியுள்ள 10 பேருக்கு ஒன்றாம் தேதி அழைப்பு கடிதம் அனுப்பி இருந்தோம். ஐந்து பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்து சென்றுள்ளனர். இப்பெண் குறிப்பிட்ட தேதியில் வரவில்லை,' என்றார்.






      Dinamalar
      Follow us