ADDED : ஆக 30, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் முனியாண்டி மனைவி விஜயா 56. இவருக்கும் இவரது உறவினரான துரைப்பாண்டியனுக்கும் இடத்தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து துரைப்பாண்டியன் பேரன் வசந்த் சரவணன் 28, விஜயாவை வெட்டியதில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஜயா கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வசந்த் சரவணன் மற்றும் அவரது தாத்தா துரைப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.