sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஸ்ட் வேலைவாய்ப்பு முகாமில் 285 பேருக்கு பணி ஆணை

/

மஸ்ட் வேலைவாய்ப்பு முகாமில் 285 பேருக்கு பணி ஆணை

மஸ்ட் வேலைவாய்ப்பு முகாமில் 285 பேருக்கு பணி ஆணை

மஸ்ட் வேலைவாய்ப்பு முகாமில் 285 பேருக்கு பணி ஆணை


ADDED : அக் 06, 2024 04:47 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் 285 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் கலந்துகொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் 85 தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்தனர். மாவட்டம் முழுவதுமிருந்து 1,966 பேர் பதிவு செய்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 9 மாற்றுத்திறனாளிகள் உட்பட 285 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் 97 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us