sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்

/

கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்

கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்

கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்


ADDED : ஜன 01, 2025 07:39 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் கால்வாயில் வீடு இடிந்து விழுந்ததில் இருந்து சோகத்தில் இருந்த துாய்மை பணியாளர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருப்புவனம் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பலரும் பிரமனுார் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இருபதிற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர். இதில் பேரூராட்சியில் துாய்மை பணியாளராக பணிபுரியும் மாரியப்பன் 58, என்பவரும் ஒருவர். தனது இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த மாரியப்பனின் வீடு கடந்த 7ம் தேதி பிரமனுார் கால்வாயில் தண்ணீர் திறப்பின் போது தடுப்புச்சுவர் சேதமடைந்ததால் இடிந்து விழுந்தது.

ஆய்வு செய்த வருவாய்த்துறை, பேரூராட்சியினர் வீடுகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் தனியார் திருமண மகாலில் இருபது குடும்பத்தையும் தங்க வைத்திருந்தனர்.

மகால் உரிமையாளர் வெளியேற்றியதை அடுத்து பேரூராட்சிக்கு என கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த புதிய கட்டடத்தில் துாய்மை பணியாளர்கள் மூன்று குடும்பங்களை தற்காலிகமாக தங்க வைத்திருந்தனர். சொந்தவீடு இடிந்து விழுந்த சோகத்தில் மாரியப்பன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அரசு கட்டடத்தில் இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலையில் மாரியப்பன் வீடு இடிந்து இடத்தின் முன் ரோட்டில் வைத்து அவரது உறவினர்கள் நேற்று மாலை இறுதி சடங்கு செய்தனர்.






      Dinamalar
      Follow us