sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நண்பர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்

/

நண்பர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்

நண்பர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்

நண்பர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்


ADDED : அக் 24, 2025 03:35 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

சிவகங்கை காமராஜர் சாலையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 27. இளையான்குடி அருகே புளியங்குளத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் பூமிநாதன் 44. இருவரும் கட்டட தொழில் செய்து வந்தனர். வேலை இல்லாத நாட்களில் சிவகங்கை, மானாமதுரையில் நுங்கு வியாபாரம் செய்தனர்.

நுங்கு விற்பனை பங்கு பணம் ரூ.1,500ஐ முத்துப்பாண்டி தரவில்லை. இந்த பணத்தில் முத்துப்பாண்டி மது அருந்தியதால் இருவருக்கும் பிரச்னை இருந்தது.

2018 ஏப்.28 ல் முத்துப்பாண்டி சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் சென்றார். இதை அறிந்த பூமிநாதன் அங்கு சென்று அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் பூமிநாதன் மறைத்து வைத்திருந்த நுங்கு வெட்டும் அரிவாளால் முத்துபாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.போலீசார் பூமிநாதனை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி அறிவொளி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us